ஜாதிக் கலவரம்.. கொடியங்குளத்திற்கு கூடுதல் நிதி
சென்னை:
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த 145 பேருக்குகூடுதலாக ரூ 11.45 இழப்பீடு தொகை வழங்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
1995- ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம், கொடியங்குளம்கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஒட்டபபிடாரம் வட்டத்தில் இருகிராமங்களும், திருவைகுண்டம் வட்டத்தில் 4 கிராமங்களும் பாதிப்புக்குள்ளாயின.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான துணை ஆட்சியர்தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு. சேத மதிப்பு அறியப்பட்டு அக்குழுவின்பரிந்துரையின் அடிப்படையில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
இது தவிர இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக முந்தைய அரசால்கோமதிநாயகம் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு. அக் கமிஷனின்பரிந்துரையின் அடிப்படையிலும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இவ்வாறு இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை ஏறத்தாழ 37 லட்ச ரூபாய்க்குமேல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கொடியங் குளத்தைச் சேர்ந்த ஆதி திராவிட மக்கள் கோமதி நாயகம் விசாரணைக்கமிஷன் முன்பு ஆஜராகவில்லை. அதனால் விசாரணைக் கமிஷன் அவர்களைவிசாரித்து அவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிட பரிந்துரை செய்ய இயலவில்லை.
தற்பொழுது கொடியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 145 ஆதிதிராவிடமக்களின் வாழக்கை நிலையை அனுசரித்து அவர்களுக்கும் கூடுதல் இழப்பீடுவழங்கிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்களுக்கு கூடுதலாக 11 லட்சத்து 45,000 ரூபாய் இழப்பீடுத் தொகையாகவழங்கிட அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரையை ஏற்று கூடுதல் இழப்பீடுத்தொகையாக 11.45 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிட முதல்வர்கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.