அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை
சென்னை:
காதித்துறையில் ஊழல் செய்த வழக்கில் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்பட 3 பேர் மீதான விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
காதித்துறையின் கீழ் இயங்கும் பட்டு விற்பனை மையத்தில் சரக்குகள் பரிமாற்றம் செய்வதில் போலி பில் தயாரித்தது. ரூ 2 கோடியே 56 லட்சம் வரைமோசடி செய்ததாக அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், காதித்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி அஜய் பட்டாச்சார்யா, கண்காணிப்பாளர் சீனிவாசன்ஆகியோரிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பிலிப் தாமஸ் வழக்குதொடர்ந்தார்.
நீதிபதி அசோக் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்ததது. அமைச்சர் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை செய்யுமாறுசி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இது போல் உள்ள புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரு வழக்கு தொடர்பாக இரு மனுக்கள் மீது விசாரணை நடத்தஅவசியமில்லை என்று போலீசாரால் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதனால் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து அறிக்கைதாக்கல் செய்யும் வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications