வியட்நாமுடன் நட்பு பலப்படும் .. கிளின்டன் நம்பிக்கை
ஹனோய் (வியட்நாம்)
அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே புதிய நட்புறவு உருவாகும் என அமெரிக்க அதிபர் பில் ளின்டன் வியட்நாமில் வெள்ளிக்கிழமைதெரிவித்தார்.
வியட்நாமில் அமெரிக்க ராணுவம் பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு, வியட்நாடம், அமெரிக்க உறவில் சரிவு ஏற்பட்டது. தற்போது இந்த உறவுபலப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிளிண்டன் வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் ஹனோயில், கிளிண்டனுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் மாளிகையில் நடந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு அவர்கூறியதாவது:
நடந்தவற்றையெல்லாம் மறந்து நான் வியட்நாமிற்கு வந்துள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இனிமேல் அமெரிக்கா, வியட்நாமுடன்புதிய நட்புறவு கொண்டு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
நான் வியட்நாம் வந்துள்ளது, இங்குள்ள மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்பதை இங்குள்ள தெருக்களில் மக்கள் ஆரவாரமாகவரவேற்றதைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். அவர்கள் தோழமை உணர்வுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
வியட்நாம் அதிபர் லியோங் கூறுகையில், கிளின்டனின், வியட்நாம் வருகைக்காக வாழ்த்து தெரிவித்தார். கிளின்டன் வருகை மூலம், இரு நாடுகளிடையிலானஉறவு மென்மேலும் வலுப்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.