மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மலேசியாவில் அடுத்த மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடக்கிறது.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஏ.ஹூசைன், பேராசிரியர் டாக்டர்ஜி.கண்ணப்பன் ஆகியோர் இதுதொடர்பாக அளித்த பேட்டி:
உலகத் திருக்குறள் மாநாடு மலேசியாவில் அடுத்த மாதம் 8,9,10 ஆகிய தேதிகளில்நடக்கிறது. 21-ம் நூற்றாண்டில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் திருக்குறளிலும்உண்டு என்பதை நிரூபிக்கும் ஆய்வுத் தாள்கள் இந்த மாநாட்டில் விவாதத்திற்குஎடுத்துக் கொள்ளப்படும்.
இக்கருத்துக்கள் அனைத்தும் தமிழ், ஆங்கிலம், மலேயா, சீனா ஆகிய மொழிகளில்தொகுத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் இருந்து சுமார் 2,500 பேராளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.மலேசிய அமைச்சர் சாமிவேல் புரவலராக செயல்படுகிறார் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications