பிற்ப்பட்டோர், சிறுபான்மையினரை குறிவைக்கும் காங்கிரஸ்
டெல்லி:
காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்டோருக்கும், சிறுபான்மை சமூகத்ததை சேர்தவர்களின்முன்னேற்றத்தில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
சோனியா காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டம் டெல்லியில் வெள்ளிக் கிழமைநடைபெற்றது. இந்தக் கூட்டம் 8 மணி நேரம் நடைபெற்றது.
காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் மாநிலங்களான ஆநதிரா, அருணாசல பிரதேசம்,சட்டீசார், டெல்லி, கர்நாடகா, மத்திய பிரதேசம், நாகாலாந்து, பாண்டிச்சேரி,ராஜஸ்தான் மற்றும் மாகாராஷ்டிர மாநில முதல்வர்களும் கட்சி பிரதிநிதிகளும்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பின் தங்கிய மக்கள் முன்னேற்றத்துக்கு எந்த மாதிரியானநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டம் நடந்த பின் நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தி, இது போன்ற கூட்டம் மிகஅவசியானது. இனி அடிக்கடி இது போன்ற கூட்டங்கள் நடைபெறும் என கூறினார்.
இதில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து கூறிய கட்சியின் பொதுச் செயலாளர்குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் விவரித்தார். அவர் கூறுகையில்,
காங்கிரஸ் ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் நூற்றுக்கணக்காண நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. இவை ஒதுக்கப்பட்டு பல புதிய சிறப்பான திட்டங்கள்செயல்படுத்தப்படும்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்தியாவில் அதிகமாக வாழும்சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடுசெய்யப்படும். கேரளாவிலும், கர்நாடகாவிலும் இந்த இட ஒதுக்கீடு உள்ளது எனஅவர் கூறினார்.
அசாம், கேரளா. பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் 2001-ம் ஆண்டுதேர்தல் நடக்கிவிருப்பதால், பின் தங்கிய மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என நிருபர்கள் கேட்ட போது அசாத்அதை மறுத்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.