திட உணவு சாப்பிடுகிறார் மாறன்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தியதொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் முறசொலி மாறனின் உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முரசொலி மாறன் கார்டியோ மயோபதி நோயால் பாதிக்கப்பட்டு சென்னைஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதால் அவருக்கு இப்போது சிறிதளவு திடஉணவும் கொடுக்கப்படுகிறது.
சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு,முரசொலி மாறனின் உடல் நிலை மருத்துவர்களால் வெள்ளிக் கிழமை மாலையும்சனிக்கிழமை காலையும் பரிசோதிக்கப்பட்டது.
அவரது நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் நிலை, சிறுநீர் வெளியேற்றம்அனைத்தும் சீரான நிலையில் இருக்கிறது என தெரிவிக்கிறது
அவருக்கு வைக்கப்ட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி முற்றிலுமாக எடுக்கப்பட்டுவிட்டது. அமைச்சர் டிவி பார்க்கவும், பத்திரிக்கைகள் படிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.பார்வையாளர்கள் அதிகம் வந்தால், தொற்று நோய் வரும் என்பதால், சிகிச்சை பெற்றுவரும் தீவிர கண்காணிப்பு பிரிவிற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அமைச்சரை சிறப்பு வார்டுக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்கள் இன்னும் 3 அல்லது 4நாட்களுக்குள் முடிவு செய்வார்கள். தற்போது அவரது முன்னேற்றதை தீவிரகண்காணிப்புப் பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications