ஜனநாயக ரீதியில் வீரப்பன் போராடலாம்
கோவை:
தமிழர் நலனுக்காக போராட வீரப்பன் விரும்பினால், நாட்டிற்குள் வந்து ஜனநாயகரீதியாகப் போராட்டம் நடத்தட்டும் என எம்.ஜி.ஆர் அ.தி.மு.க பொதுச் செயலர்திருநாவுக்கரசு தெரிவித்தார்.
கோவையில் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க பொதுச் செயலர் திருநாவுக்கரசு நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:
காட்டிற்குள் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட ராஜ்குமார் 108 நாட்களுக்கு பிறகுவிடுவிக்கப்பட்டுள்ளார். இவரை விடுவிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்ட தமிழ்நாடுமற்றும் கர்நாடக அரசு, தூதுக்குழுவினர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் நிதானமாகச் செயல்பட்டு எவ்வித பாதிப்பும் இழப்பிற்கும் இடம்கொடுக்காமல் இரு மாநில அரசுகளும் செயல்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்கள் வருங்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுஅவசியம். ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டதால் வீரப்பன் நல்லவனாகி விடமுடியாது. உண்மையிலேயே தமிழர்களின் நலனுக்காக வீரப்பன் பாடுபட நினைத்தால்,நாட்டிற்குள் வந்து ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தட்டும்.
எந்த சூழ்நிலையிலும் எந்த விதத்திலும், ஆள் கடத்தல், தீவிரவாதம் போன்றவற்றைஅனுமதிக்க முடியாது.
அதிரடிப்படை மனித உரிமை மீறிய செயல்களில் ஈடுபட்டிருக்குமானால் அதுதிட்டமிட்ட செயலாக இருக்காது. அவ்வாறு மீறப்பட்டிருந்தால் அரசு உடனடியாகநடவடிக்கை மேற்கொள்ளலாம். வீரப்பனை பிடிக்க மீண்டும் அதிரடிப்படையைஅனுப்புவது அந்தந்த நேரங்களில் ஏற்படும் சூழ்நிலையைப் பொறுத்து இருக்கக்கூடாது.
வாக்களர் அடையாள அட்டையில் குளறுபடி உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ்குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் 5 கோடி மக்களுக்கு அடையாள அட்டைவழங்குவது மிகப் பெரிய பணி. இதில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படத்தான்செய்யும். அப்படி ஏற்படும் போது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை நிலவுகிறது. அமைச்சர் பதவிகிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியை விட்டு விலகும் எண்ணம் எனக்குஇல்லை.
பாட்டாளி மக்கள் கட்சியும் இந்தக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும். எதிரணியானஅ.தி.மு.க கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த குழப்பத்தால் தேர்தலுக்குப்பிறகு இக்கூட்டணி தேய்ந்து போகும்.
நான்கே எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிப்பேன் எனஜெயலலிதா கூறிவருகிறார். 40 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் மூப்பனார்ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறு இல்லை.
தமிழகத்தில் முன்றாவது அணி அமைவது மூப்பனாரின் கையில் தான் உள்ளது.அவ்வாறு மூன்றாவது அணி அமைந்தாலும், அது பலமுள்ளதாக இருக்காது என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications