Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயக ரீதியில் வீரப்பன் போராடலாம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழர் நலனுக்காக போராட வீரப்பன் விரும்பினால், நாட்டிற்குள் வந்து ஜனநாயகரீதியாகப் போராட்டம் நடத்தட்டும் என எம்.ஜி.ஆர் அ.தி.மு.க பொதுச் செயலர்திருநாவுக்கரசு தெரிவித்தார்.

கோவையில் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க பொதுச் செயலர் திருநாவுக்கரசு நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:

காட்டிற்குள் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட ராஜ்குமார் 108 நாட்களுக்கு பிறகுவிடுவிக்கப்பட்டுள்ளார். இவரை விடுவிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்ட தமிழ்நாடுமற்றும் கர்நாடக அரசு, தூதுக்குழுவினர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் நிதானமாகச் செயல்பட்டு எவ்வித பாதிப்பும் இழப்பிற்கும் இடம்கொடுக்காமல் இரு மாநில அரசுகளும் செயல்பட்டுள்ளன.

இதுபோன்ற செயல்கள் வருங்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுஅவசியம். ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டதால் வீரப்பன் நல்லவனாகி விடமுடியாது. உண்மையிலேயே தமிழர்களின் நலனுக்காக வீரப்பன் பாடுபட நினைத்தால்,நாட்டிற்குள் வந்து ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்தட்டும்.

எந்த சூழ்நிலையிலும் எந்த விதத்திலும், ஆள் கடத்தல், தீவிரவாதம் போன்றவற்றைஅனுமதிக்க முடியாது.

அதிரடிப்படை மனித உரிமை மீறிய செயல்களில் ஈடுபட்டிருக்குமானால் அதுதிட்டமிட்ட செயலாக இருக்காது. அவ்வாறு மீறப்பட்டிருந்தால் அரசு உடனடியாகநடவடிக்கை மேற்கொள்ளலாம். வீரப்பனை பிடிக்க மீண்டும் அதிரடிப்படையைஅனுப்புவது அந்தந்த நேரங்களில் ஏற்படும் சூழ்நிலையைப் பொறுத்து இருக்கக்கூடாது.

வாக்களர் அடையாள அட்டையில் குளறுபடி உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ்குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் 5 கோடி மக்களுக்கு அடையாள அட்டைவழங்குவது மிகப் பெரிய பணி. இதில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படத்தான்செய்யும். அப்படி ஏற்படும் போது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமை நிலவுகிறது. அமைச்சர் பதவிகிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணியை விட்டு விலகும் எண்ணம் எனக்குஇல்லை.

பாட்டாளி மக்கள் கட்சியும் இந்தக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும். எதிரணியானஅ.தி.மு.க கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த குழப்பத்தால் தேர்தலுக்குப்பிறகு இக்கூட்டணி தேய்ந்து போகும்.

நான்கே எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிப்பேன் எனஜெயலலிதா கூறிவருகிறார். 40 எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் மூப்பனார்ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறு இல்லை.

தமிழகத்தில் முன்றாவது அணி அமைவது மூப்பனாரின் கையில் தான் உள்ளது.அவ்வாறு மூன்றாவது அணி அமைந்தாலும், அது பலமுள்ளதாக இருக்காது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+