வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு சமாதி கட்டுங்கள்: ஜெ
சென்னை:
வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வருமாறு, தலைமைத் தேர்தல் கமிஷனர் கில்லுக்கு,அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது புகாரில் ஜெயலலிதா, கடந்த தேர்தலில் தி.மு.க. பல முறைகேடுகள் செய்து ஆட்சிக்கு வந்துள்ளது. அதைமுடிவுக்கு கொண்டு வர தேர்தல் கமிஷன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நேர்மையான தேர்தல் அதிகாரியும் துணை தாசில்தாருமான ஜோன் ஆஃப் ஆர்க் என்ற அதிகாரி தி.மு.க.வின்ஊழல்களை வெளிப்படுத்தியதால் அவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
தமிழக வருவாய் துறை அதிகாரிள் கழகம் நேர்மையான அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது பற்றியும்,வீராசாமியின் தூண்டுதலின் பேரில் நேர்மையான அதிகாரிகள் பணி நீக்கம் செய்தது பற்றி என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டது எனபது பற்றியும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் அதிகாரியை மிரட்டிய வீராசாமி மீது நடவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துணிவு இல்லை என்றார்ஜெயலலிதா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications