For Daily Alerts
Just In
சென்னையில் நாளை தொடங்குகிறது பெண்களுக்கான செஸ்
சென்னை:
பெண்களுக்கான 19 வது ராசல் பரஞ்சோதி நினைவு செஸ் போட்டியை சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடத்துகிறது.
இதுகுறித்து, தமிழக செஸ் சங்கப் பொதுச்செயலாளர் மானுவல் ஆரோன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எத்திராஜ் கல்லூரியில் நவம்பர் 20 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை இப்போட்டி நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதில்பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ 1000.
இப்போட்டிக்கான நுழைவுக்கட்டணம் ரூ 50. போட்டி நடைபெறும் திங்கள்கிழமை காலை 9 மணிக்குள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் விண்ணப்பத்தை உடற்கல்வி இயக்குநர், எத்திராஜ் கல்லூரி, சென்னை -8 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றுகூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, November 19, 2000, 5:30 [IST]