மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தனி இயக்குநர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் ஆங்கில பள்ளிகளுக்கு தனி இயக்குனர் அலுவலத்தை நியமிக்குமாறு தமிழ்நாடுதமிழ் மற்றும் ஆங்கில பள்ளிகள் கழகம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 100 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றபள்ளிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:

தமிழக அரசு 7,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அந்த பள்ளிகளில் 2லட்சம் ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். 30 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும் என கூறினார்.

இந்த அமைப்பின் மாநில செயலாளர் தங்கம் மூர்த்தி பேசுகையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கெனஇன்ஸ்பெக்டர்கள் அமைக்கப்பட வேண்டுமென தமிழக அரசை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

தற்போது சென்னை, மதுரை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் எண்ணிக்கை 7000மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்குப் போதுமானதாக இல்லை என்றார்.

இந்தக் கூட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர் பயிற்சி பரிசு வழங்குவதற்கும்தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+