அதிமுகவை குறை காண்பதே திமுக வின் குறிக்கோள்
திருச்சி:
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்களையே சுட்டிக் காட்டி அவருக்குத் தண்டனை வாங்கித் தருவதையே திமுக குறிக்கோளாகக் கொண்டுள்ளதுஎன்று புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்க ழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத்தொடங்கினார்கள். அதன் தலைவராக முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் செயல்பட்டு வருகிறார்.
அந்தக் கட்சியின் பொருளாளார் ராஜாமுகமது சனிக்கிழமையன்று நிருபர்களிடம் பேசுகையில், எஸ்.டி சோமசுந்தரம் தலைமையில் தமிழகத்தில் மூன்றாவதுஅணி அமைப்பது குறித்து பல கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
ஆனால் இது தமிழகத்தில் மட்டுமே செயல் படும். தேசிய அளவில் செயல்படாது. இந்த மூன்றாவது அணியில் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோநிச்சயம் இடம் பெறாது.
கடந்த 54 மாத ஆட்சியில் தி.மு.க. முந்தைய ஆட்சியில் ஜெயலலிதா செய்சத ஊழல்கள் பற்றியே பேசி அதில் அவருக்கு தண்டனை வாங்கித்தரும் முயற்சியில்மட்டுமே ஈடுபட்டு வந்தது. மக்கள் நலத் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை என்றார்.
மூன்றாவது அணிக்கு மூப்பானார் தலைமை ஏற்கக்கூடும் என கூறப்படுகிறதே என நிருபர்கள் கேட்ட போது, மூப்பனார் தனது நிலையை உடனேதெளிவு படுத்த வேண்டும் என பதிலளித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications