அதிமுக-தேசிய லீக் கூட்டணி நீடிக்கும்
கோவை:
இந்திய தேசிய லீக் கட்சி, அதிமுக கூட்டணியில் நீடிக்கும் என்று எம்.எல்.ஏ.லத்தீப் கூறினார்.
இந்திய தேசிய லீக் கட்சியின், அகில இந்திய பொதுச் செயலாளர் லத்தீப் கோவையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், இந்திய தேசிய லீக் கட்சியும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இரு கட்சிகளுக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் கிடையாது. தனி நபர்களுக்கிடையே இருந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவுமில்லை.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் நடை பெறவில்லை. பாரதிய ஜனதா கூட்டணியுடன் திமுகசேர்ந்ததால் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. அண்ணா, காயிதே மில்லத் உருவாக்கிய அடிப்படை கொள்கைகளுக்கு எதிர்மாறாக திமுகசெயல்பட்டு வருகிறது.
வருகிற தேர்தலில் திமுக வை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள். கடந்த முறை நாங்கள் போட்டியிட்ட 5 தொகுதியிலும் வெற்றி பெற்றோம். இந்தமுறையும் வெற்றி பெறுவோம்.
இப்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் உள்ளோம். இதே கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்றார் லத்தீப்.












Click it and Unblock the Notifications