பெட்ரோல் விலை குறையுமா?
ஹைதராபாத்:
பெட்ரோல் விலை குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண்தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜிஉள்பட தேசிய முண்ணனியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வைமறு பரிசீலனை செய்யும் படி கோரிக்கை விடுத்துள்ளன.
முதன் முதலில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுநடத்தப்பட்ட போது பாரதிய ஜனதா தான் வலியுறுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பெட்ரோலியபொருட்களின் விலை உயர்வு குறித்து மறு பரிசீலனை செய்யப்படும். பெட்ரோல் விலையில் சில மாற்றங்கள்ஏற்படலாம்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால்தான் பெட்ரோலிய பொருட்களின் விலைஅதிகரித்துள்ளது. விலை உயர்வு மக்களை அதிகமாக பாதிக்காமல் கச்சா எண்ணெய் உற்பத்தியையும்,கையிருப்பையும் அதிகப்படுத்தி பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை குறைக்க முடியுமா என்பது பற்றிஅரசு பரிசீலனை செய்யும் என அவர் கூறினார்.