காங். தலைவர் தேர்தலில் குளறுபடி: ஜிதேந்திரா புகார்
டெல்லி:
காங்கிரஸ் அமைப்பு தேர்தல் நடவடிக்கைகளை, கட்சி முறைப்படி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜிதேந்திர பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஜிதேந்திர பிரசாத்.
இவர் தற்போது தேர்தல் பொறுப்பாளர் ராம் நிவாஸ் மிர்தாவிடம் மனுக் கொடுத்துள்ளார்.
அதில், காங்கிரஸ் அமைப்புத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே கட்சியின் தேர்தல் விதிமுறைப்படி, தேர்தல்நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவதை விட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியாகாந்திக்கு வாழ்த்து தெரிவித்தும், ஜிதேந்திர பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார்.
யு.என்.ஐ.