2 சென்டிமீட்டரில் பகவத்கீதை
கோவை:
சாதனை செய்ய வேண்டும் என நினைத்து விட்டால், அதற்கு விடா முயற்சி இருந்து விட்டால் நிச்சயம் சாதனையை எட்டி விடலாம்.
திருக்குறளை குறுக்கி தரித்து சென்டிமீட்டருக்குள் அடக்கிச் சாதனை செய்தவர்களைப் பார்த்துக் "காப்பி அடித்துள்ளார் கோவை அருகே உள்ள பூலுவாபட்டி,அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் யோகராஜா (17).
இவரும் திருக்குறளை கைக்குள் அடக்க முயற்சி மேற் கொண்டபோது, அதனை முறியடித்து திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் முந்திக் கொண்டார். எனவே,மனம் தளர விடாமல் தொடர்ந்து முயன்ற யோகராஜா, பாரதியாரின் பகவத் கீதையை எடுத்துக் கொண்டு பிரதி எடுத்தார்.
தினம், மூன்று மணிநேரம் கடுமையாக உழைத்து, ஒரு 177 பக்கம் கொண்ட புத்தகத்தை தயாரித்தார். இதில் என்ன அதிசயம் ? என்கிறீர்களா? இந்தபுத்தகத்தின் உயரமே இரண்டு சென்டி மீட்டர் தான். அகலம், இரண்டரை சென்டி மீட்டர் ஆச்சர்யம் தானே?.
யோகராஜா, ஏதாவது ஒரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், திட்டமிட்டு செயல்பட்டார். வெற்றியும் பெற்றார். எனவே சாதனைஎன்பது நமது உள்ளத்தில் தான் உள்ளது.
அதைத் திறமையாகச் செயல்படுத்துவது நம் கையில் உள்ளது. யோகராஜா இலங்கையைச் சேர்ந்தவர். சொந்த ஊர் தலைமன்னார். இவரது தந்தை கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.












Click it and Unblock the Notifications