திமுக வை தோற்கடிப்போம் .. வி.எச்.பி.
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க, இந்து இயக்கங்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்என்று விஸ்வ ஹிந்து பரிஷத் துணைத் தலைவர் வேதாந்தம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் கிராமக் கோவில் பூஜாரிகளின் 15 நாள் கோவில் வழிபாட்டு முறைகள் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. இதில் கலந்து கொண்ட வேதாந்தம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்து மத பழக்கங்களை கிண்டல் செய்வது தமிழக முதல்வர் கருணாநிதியின் வழக்கமாகி விட்டது. இந்த அரசால்எப்போதும் இல்லாத வகையில் விநாயகர் ஊர்வலம் தடை செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் வில்லுண்டி தீர்த்தத்தில் உள்ள சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவது இந்துக்களுக்கு விடப்படும்எச்சரிக்கை. பெரும்பான்மை இந்துக்களுக்கு சிறுபான்மையினரால் பாதிப்பு உள்ளது என்பதையே இதுகாட்டுகிறது.
தமிழக கோவில்களில் பக்தர்களால் வழங்கப்படும் பணம் வருடத்திற்கு 110 கோடி அளவுக்கு அறநிலையத்துறைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் கோவில்களுக்கு முழுமையான பராமரிப்பு செய்யப்படுவது இல்லை.கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்.
இல்லையென்றால் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகி விடும். கருணாநிதி இந்துக்களின் ஓட்டுக்களைபற்றி கவலைப்படவில்லை.
வருகின்ற தேர்தலில் இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மதித்து நடக்கும் அரசியல் கட்சிகளுக்குஓட்டளிக்க வேண்டும்.
இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதற்காக நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். பல்வேறு இந்துஇயக்கங்களை ஒன்றிணைத்து மக்களிடையே திமுகவிற்கு எதிராக ஆதரவு திரட்டுவோம் என்றார் வேதாந்தம்.