ராஜ்குமார் கடத்தல் நாடகம் புத்தகமானது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டதை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டபுத்தகம் பெங்களூரில் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் காட்டில் 108 நாட்கள்பிணைக்கைதியாக இருந்த பிறகு விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு கிரானைட் கல் ஏற்றுமதி செய்யும் பசவராஜ்தின்தூர் எழுதிய நரகந்தகா வீரப்பனகே டாக்டர் ராஜ்தீக்ஷா (சந்தன கடத்தல்வீரப்பனை திருத்திய டாக்டர் ராஜ்) என்ற புத்தகம் பரபரப்பாக விற்பனையாகிவருகிறது.

80 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாகஅறிமுகமானது முதல் கடத்தல் வரை உள்ள சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் இந்த புத்தகத்தில் ராஜ்குமாரை மீட்ட தமிழர் தேசிய இயக்க தலைவர்நெடுமாறன் பாராட்டப் பட்டிருக்கிறார். நக்கீரன் கோபாலும், வீரப்பனும் கடுயாைகவிமர்சிக்கப்பட்டுள்ளனர். கோபாலின் பயணம் ராஜ்குமாரை விடுவிக்கும் எண்ணத்தில்நடத்தப்படவில்லை. சொந்த லாபத்துக்காக நடந்தது.

ராஜ்குமார் வீரப்பனுக்கு யோகா கற்றுக் கொடுத்ததால் அவனுக்கு அவர் மேல் மிகஅன்பு ஏற்பட்டது. இதனால் வீரப்பன் ராஜ்குமாரை விடுவிக்க சம்மதித்தான். இனி இதுபோன்ற கடத்தல் சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என அவன் ராஜ்குமாரிடம்உறுதியளித்தான்.

ராஜ்குமார் கடத்தலுக்கு முன்னதாக தமிழ்நாடு விடுதலைப் படை தலைவன் மாறன்மற்றும் வீரப்பனிடமிருந்து வந்த மிரட்டல் போன்றவையும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த புத்தகத்தை கன்னட எழுத்தாளர் எஸ்.எஸ். முராலியா வெளியிட்டு பேசும் போதுராஜ்குமார் கடத்தல் விஷயம் காரணமாக இந்த புத்தகம் நன்கு விற்பனையாகும் எனகூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+