பாலு ஜூவல்லரி உரிமையாளருக்கு குற்றப்பத்திரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுமார் ரூ 25 கோடிக்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த வழக்கில் பாலு ஜூவல்லரி உரிமையாளருக்கும், மேலும் 4 பேருக்கும்சிறப்புநீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை நகல்களை திங்கள்கிழமை வழங்கியது.

இவர்கள் மீது தமிழக முதலீட்டாளர்கள் நலச் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி முருகானந்தம், சுமார் 7000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை இவ்வழக்கில் தொடர்புடைய பாலு ஜூவல்லரி உரிமையாளர்ஐயப்பன், அங்கு வேலை செய்து வந்த பாஸ்கரன், புருஷோத்தமன் சுந்தர், பாலாஜி, தாசப்பன் ஆகியோருக்கு வழங்கினார்.

இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 27 ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.

1995 முதல் 1998ம் ஆண்டு வரை பாலு ஜூவல்லரியில் 13, 000 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்தார்கள். அவர்களுக்கு 21 சதவீதம்வட்டி தருவதாகக் கூறி சுமார் ரூ 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்தப் பணம் திருப்பித் தரப்படவில்லை. இதையடுத்து இவர்கள்மேல் வழக்குத் தொடரப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+