4 வருடத்திற்கு பின் மீண்டும் சிறை செல்கிறார் எர்ஷாத்
டாக்கா (வங்கதேசம்):
வங்க தேச முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், ஜாடியா கட்சித் தலைவருமானலெப்டினன்ட் ஜெனரல் ஹுசைன் முகமது எர்ஷாத் மீண்டும் சிறையில்அடைக்கப்படுகிறார்.
எர்ஷாத் 1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅப்துல் சதாரை ராணுவ புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்து அதிபரானார். 8 ஆண்டுஆட்சிக்குப் பின் 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட மக்கள் புரட்சியில்,பதவியிழந்தார்.
அவர் மீது ஜனதா டவர் கேஸ் என்ற வழக்கு இருந்தது. அவர் மிகப் பெரிய கட்டிடடம்ஒன்று கட்டியுள்ளதாகவும், அது அவரது வருமானத்திற்கு மீறியது எனவும்,வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில்அவருக்கு 7 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
வங்கதேச அரசியலிலேயே அதிக காலம் சிறை தண்டனை பெற்றவர் எர்ஷாத் தான்.இந்த நிலையில், 1997-ம் ஆண்டு ஜனவரிமாதம் 9-ம் தேதி ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில் மற்றொரு ஊழல் வழக்கில் எர்ஷாத் மீண்டும் சிறைசெல்லவிருக்கிறார். திங்கள் கிழமை தனது ஆதரவாளர்கள் புடை சூழ நீதிமன்றத்திற்குச்சென்று எர்ஷாத் ஆஜராகிறார். அதன் பின் அவர் சிறையில் அடைக்கப்படுவது குறித்துதெரியவரும்.
ஐ.ஏ.என்.எஸ்.