காதலிக்காக கடலுக்குள் காருடன் சென்று மாண்டவர்
கோலாலம்பூர்:
மலேசியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது காதலியின் நம்பிக்கையைப் பெறுவற்காக காருடன், கடலுக்குள் சென்று உயிரை விட்டார்.
மலேசியாவிலுள்ள ஜோஹேர் மாநிலத்தில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு பத்திரிகையொன்றில் வந்துள்ளசெய்தி:
ஜோஹோர் மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரைக்கு, 32 வயதான வாலிபர் ஒருவர் தனது காதலியுடன், ஹோண்டா காரில் வந்துள்ளார். அப்போது ஏதோ ஒருவிவகாரத்தில், காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது போலும். தன்னை நம்பாத காதலிக்கு, தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க முடிவு செய்தார்.
ஹோண்டா காருடன், காதலி பக்கதில் இருக்கும்போது, வேகமாக கடலுக்குள் காரை செலுத்தினார். கடலுக்குள் சிறிது தூரம் சென்று விட்ட கார்,நின்று விட்டது. ஆனாலும் அந்த நபர் தனது செயலை நிறுத்தவில்லை. காரிலிருந்து வெளியே வந்து கடலுக்குள் நடந்தார். பின்னர் மூழ்கி விட்டார்.
வாலிபர் கடலில் மூழ்குவதை அவரது காதலியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடலில் மூழ்கியவரின் உடல் சில மணி நேரங்களுக்குப் பின் மீட்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் அதிகாரி அபு பக்கர் இதுகுறித்துக் கூறுகையில், கடலில் மூழ்கி இறந்த வாலிபரின் காதலி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்என்றார்.












Click it and Unblock the Notifications