திண்டுக்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி
மதுரை:
தமிழகத்தில் திண்டுக்கல்லில் ஒரு அலுமினியம் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், இங்குள்ள அலுமினியத் தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தண்டபாணி என்பவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். அவருக்கு வயது 55.
விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல் என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த மூன்றுபேர் மருத்துவமனிைல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை தண்டபாணி இரும்பு கண்டெய்னர் பெட்டியைத் திறக்க முயன்ற போது அது திடீரென்று வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டது என்றனர்.இது ஏன் வெடித்தது என்று தெரியவில்லை.
சிவகாசியிலிருந்து நிபுணர்கள், திண்டுக்கல் அலுமினியம் தொழிற்சாலைக்குச் சென்று, இரும்புக் கண்டெய்னர்களை சோதனையிட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications