ஆர்.டி.ஓ. தலையீடு .. நக்சலைட் ஆதரவாளர் விடுதலை
தர்மபுரி:
கைது செய்ப்பட்ட நக்சலைட்டின் பெற்றோர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தாலும்,ஆர்.டி.ஓ தலையீட்டாலும் கைது செய்யப்பட்டிருந்த ஒரு நக்சலைட் ஆதரவாளர் விடுதலைசெய்யப்பட்டார்.
தர்மபுரிக்கு அருகே உள்ள முக்கனூரில் வசித்து வந்தவர் செந்தமிழ் குமரன். இவர்நக்சலைட் ஆதரவு மற்றும் சட்டத்திற்கு புறம்பான சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.இவரை பல காலமாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் இவர் தலைமறைவாக இருந்துவந்தார்.
இந் நிலையில் இவரை முக்கனூரில் மதிகோன்பாளையம் போலீசார் கைதுசெய்தனர்.காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோது அவரது பெற்றோரும்,உறவினர்களும் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.
தகவல் கிடைத்து காவல் நிலையம் வந்த தர்மபுரிஆர்.டி.ஓ. ஆறுமுகத்தின் ஜீப்பும் தடுத்துநிறுத்தப்பட்டது. உறவினர்கள் ஆர்.டி.ஓ. விடம் முறையீடு செய்தனர். காவல்நிலையத்திற்கு சென்று ஆர்.டி.ஓ. பேச்சு நடத்திய பின் செந்தமிழ் குமரன் பெற்றோருடன்அனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications