ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: ராமதாஸ்
கோவை:
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம், கொடுத்தாலும் வாங்க மாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோவையில்ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் 200 வது மாநில மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டை யொட்டி பொதுக் குழுக் கூட்டம் நடந்தது.பொதுக்குழுக் கூட்டம் முடிந்தவுடன், பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், இந்த அணைப் பகுதியைப் பார்வையிட வரவிருக்கும் மத்திய அரசுக்குழுவினருக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட தமிழக பொதுப் பணி ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து சென்னையில் வரும் டிசம்பர் மாதம்போராட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதனை நாங்கள்பொருட்படுத்தவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பலர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மாநிலத் தலைவர் மணிமுதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். முதல்வரும் கவனிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
பாட்டளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வருகிறது. நீடிக்கும். பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை நிலையாக இல்லை.
சில மாதங்களில் ஏறுகிறது. சில மாதங்களில் இறங்குகிறது. மம்தா பானர்ஜி இப்பிரச்னையை பெரிதுபடுத்தியிருக்க வேண்டியதில்லை. இது கூட்டணிக் கூட்டுக்குழுக் கூட்டத்திலேயே பேசி முடித்திருக்கலாம். வாழப்பாடி ராமர்த்தி அமைச்சராக இருந்தபோது ஒரு ரூபாய் குறைக்கப்பட்டது.
வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு என்ற சர்ச்சை இப்போது இல்லை, வீரப்பனே பொதுமன்னிப்பு கேட்கவில்லை. இந்த பிரச்னையில் யாருக்கும் நஷ்டம்இல்லை. ஒரு வாரப் பத்திரிக்கையைத் தவிர. அந்த பத்திரிக்கையால் கூட பின்னடைவு ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.
இது போன்ற கடத்தல் நாடகங்கள் வருங்காலதில் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
அரசு வங்கிகளைத் தனியார் மயாமக்கக் கூடாது. இதனை சீரமைத்து தற்போதுள்ள நிலையே நீடிக்கச் செய்ய வேண்டும். அரசியல் குறித்து பிப்ரவரியில்நடக்கும் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். கொடுத்தாலும் வாங்கமாட்டோம் என்றார்.
பேட்டியின்போது மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் சண்முகம், எம்.பி, இளங்கோவன், மாநிலத் தலைவர் ஜி.கே மணி ஆகியோர் உடனிருந்தனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications