ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: ராமதாஸ்
கோவை:
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம், கொடுத்தாலும் வாங்க மாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோவையில்ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் 200 வது மாநில மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டை யொட்டி பொதுக் குழுக் கூட்டம் நடந்தது.பொதுக்குழுக் கூட்டம் முடிந்தவுடன், பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த கேரள அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், இந்த அணைப் பகுதியைப் பார்வையிட வரவிருக்கும் மத்திய அரசுக்குழுவினருக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்ட தமிழக பொதுப் பணி ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து சென்னையில் வரும் டிசம்பர் மாதம்போராட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதனை நாங்கள்பொருட்படுத்தவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பலர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மாநிலத் தலைவர் மணிமுதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். முதல்வரும் கவனிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
பாட்டளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வருகிறது. நீடிக்கும். பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை நிலையாக இல்லை.
சில மாதங்களில் ஏறுகிறது. சில மாதங்களில் இறங்குகிறது. மம்தா பானர்ஜி இப்பிரச்னையை பெரிதுபடுத்தியிருக்க வேண்டியதில்லை. இது கூட்டணிக் கூட்டுக்குழுக் கூட்டத்திலேயே பேசி முடித்திருக்கலாம். வாழப்பாடி ராமர்த்தி அமைச்சராக இருந்தபோது ஒரு ரூபாய் குறைக்கப்பட்டது.
வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு என்ற சர்ச்சை இப்போது இல்லை, வீரப்பனே பொதுமன்னிப்பு கேட்கவில்லை. இந்த பிரச்னையில் யாருக்கும் நஷ்டம்இல்லை. ஒரு வாரப் பத்திரிக்கையைத் தவிர. அந்த பத்திரிக்கையால் கூட பின்னடைவு ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.
இது போன்ற கடத்தல் நாடகங்கள் வருங்காலதில் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
அரசு வங்கிகளைத் தனியார் மயாமக்கக் கூடாது. இதனை சீரமைத்து தற்போதுள்ள நிலையே நீடிக்கச் செய்ய வேண்டும். அரசியல் குறித்து பிப்ரவரியில்நடக்கும் பொதுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். கொடுத்தாலும் வாங்கமாட்டோம் என்றார்.
பேட்டியின்போது மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் சண்முகம், எம்.பி, இளங்கோவன், மாநிலத் தலைவர் ஜி.கே மணி ஆகியோர் உடனிருந்தனர்.
-
ராமதாஸ் தரப்புக்கு பெரிய அடி.. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்! -
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கும்.. சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications