தமிழகத்தில் புயல் சின்னம்: பலத்த மழை பெய்யும்
சென்னை:
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலைஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது.சனிக்கிழமை மாலை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பலத்தமழை பெய்துள்ளது.
புதுக்கோட்டை, அதிராம்பட்டினம், செம்பரம்பாக்கம், காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்ததாழ்வழுத்த மண்டலம் உருவாகியுள்ளது. இது வலுவடைந்து புயல்சின்னமாக மாறக் கூடும்.
இதனால் தமிழகம் முழுவதும் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.