சத்துணவு சாப்பிட்ட குழந்தை சாவு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டி பாளையத்தில் உள்ள பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும் எட்டுகுழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

லிங்கா ரெட்டிபாளையத்தில் உள்ள சரஸ்வதி நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் கடந்த 17-ம் தேதி சத்துணவு வழங்கப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் 280மாணவ மாணவிகள் சத்துணவை சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென்று சில குழந்தைகள் வாந்தி எடுத்தனர். பின்னர் மயங்கி விழுந்தனர். இதனால் பள்ளியில் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக,மாணவ மாணவிகளை புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இவர்களில் 9 மாணவ மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நல்லூர் குச்சிப்பாளையம் அல்லி முத்து என்பவரதுமகள் ஜெயகாந்தி (வயது 6), பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அல்லிமுத்து வளவனூர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் போலீஸார் சத்துணவு மைய பொறுப்பாளர் பூபாலன், உதவியாளர்கள் ராணி, மற்றொரு ராணி ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் மதிய சத்துணவில் விஷத்தன்மை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+