ஆந்திராவில் ஒரே நாளில் 12 மாணவர்கள் கடலில் மூழ்கினர்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நடந்த மூன்றுவெவ்வேறு சம்பவங்களில் 12 மாணவர்கள் கடல் மற்றும் கால்வாயில் மூழ்கினர்.
மூன்று சம்பவங்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. பீமாவரம்எஸ்.ஆர்.கே.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள், மேற்கு கோதவரிமாவட்டம் சினகொல்லபலம் என்ற இடத்தில் கடலில் மூழ்கினர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் பிஞ்சரகோங்கா நீர்வீழ்ச்சி அருகே உள்ள கால்வாயைகயிறு மூலம் கடக்க முயன்ற 2 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள்இருவரும் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள்.
அதே மாவட்டத்தில், காக்கிநாடா கடலில் 3 மாணவர்கள் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதேபோல, வடலேரவு கடல் பகுதியில் 1 மாணவர் அடித்துச்செல்லப்பட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications