கால் முளைத்த பாம்பு !
ஈரோடு:
பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. ஆனால், பாம்பின் கால் பாம்பறியும் என்று பழமொழி உண்டு.
ஈரோடு அருகே உள்ள உத்தாண்டிபாளையத்தில் கால் உள்ள பாம்பு ஒன்று பிடிபட்டது. இந்தப் பாம்பை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.
உத்தாண்டிபாளையத்தில் ஒரு விவசாயின் வீட்டிற்கு அருகே ஒரு பாம்பு சென்றது. கட்டுவிரியன் என அழைக்கப்படும் இந்தபாம்பைக் கண்டவுடன் அந்த விவசாயி மற்றும் அருகில் இருந்த சிலர் அதை அடித்துக் கொன்றனர்.
வேகமாகச் செல்ல முடியாமல் வயிற்றிப் பகுதியில் பருமனடன் இருந்த இந்த பாம்பை குப்புறப்பபோட்டு பார்த்தாது தான் இந்தபாம்பிற்குக் கால் முளைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாம்பிற்கு காலா? என பொதுமக்கள் வியந்தனர். செய்தி ஊர் முழுக்கப் பரவியது. இந்த அதிசயத்தை ஊர் மக்கள் கூடி வேடிக்கைபார்த்தனர். மேலும், இந்தப் பாம்பு காட்சிப் பொருளாக மாறி விட்டது. விஷயம் அறிந்த பத்திரிக்கை போட்டோகிராபர்கள் அங்குபடையெடுத்தனர்.