வீரப்பனைப் பிடிக்க கர்நாடக அரசு தீவிரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனைப் பிடிப்பதற்காக அதிரடித் தாக்குதல் நடத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன், முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திங்கள்கிழமை ஆலோசனைநடத்துகிறார்.

போலீஸார் உள்பட 120 பேர்களைக் கொன்றதாகவும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடியதாகவும்,தேடப்பட்டு வரும் சந்தனக் கடத்தல் வீரப்பன், கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றார்.

108 நாட்களுக்குப்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறுதரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் பயிற்சி பெற்ற அதிரடிப்படையை வரவழைத்து வீரப்பன் கும்பலை வேட்டையாட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாகூறியுள்ளார்.

இதற்கிடையே, வீரப்பன் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்று தமிழர்தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் வீரப்பனைத் தேடும் வேட்டையை தீவிரப்படுத்தவும், அவர் மீது பெரிய தாக்குதல் நடத்தவும், கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாகத்தெரிகிறது.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன், முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறார். விதானசவுதாவிலுள்ள கமிட்டி அறையில்திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சட்டசபையில் செவ்வாய்க்கிழமைஅறிவிக்கப்படும். அப்போது வீரப்பனைப் பிடிக்க எவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் என்பது தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+