கடும் மழை: சென்னையில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால் ரயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் பெங்களூர்-மைசூர் ரயில்கள்சென்னையிலிருந்து மிகவும் தாமதமாகக் கிளம்பிச் சென்றன.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழை காரணமாக சென்னை அருகே 3 இடங்களில்தண்டவாளங்களுக்கு கீழே மண் அடித்துச் செல்லப்பட்டு அரிப்பு ஏற்பட்டது.
சென்னைக்கும், அத்திப்பட்டுக்கும் இடையே தண்டவாளத்தில் விரிசலும் ஏற்பட்டது. இதனைத் தண்டவாளத்தை சோதனை செய்யும் கேங்க்மேன் பார்த்து உயர்அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர்.
இதனால் கோராக்பூரிலிருந்து, கொச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அத்திப்பட்டில் நிறுத்தப்பட்டு, 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
திருவாலங்காட்டுக்கும், காட்பாடிக்கும் இடையே தண்டவாளத்தில் இன்னொரு விரிசல் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட இந்த விரிசலால் சென்னைக்குவரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன.
ஏற்காடு எக்ஸ்பிரஸ், மைசூரிலிருந்து செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கடம்பத்தூரிலும், பெங்களூரிலிருந்து சென்னை வரும் ரயில்அரக்கோணத்திலும் நிறுத்தப்பட்டன.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யப்பட்டு, இந்த ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை போய்ச் சேர்ந்தன.
சரியான நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை செல்லும் ரயில்கள் பெரிய விபத்தில் சிக்காமல் தப்பின.












Click it and Unblock the Notifications