மதுரை பல்கலைக்கழகத்தின் பரீட்சைக் குழப்பம்
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்லூரிகளில்நடைபெற்று வரும் பரீட்சை கேள்வித்தாளில் குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள்அந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்துகல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. இதில் சென்ற 15-ம் தேதி நடந்தமுதலாம் வருட பி.பி.ஏ. பட்டப்படிப்பின் பொருளியல் பகுப்பாய்வு பாடத்திற்கானதேர்வு வினாத்தாளில் முதல் செமஸ்டருக்கு பதிலாக இரண்டாம் செமஸ்டர்பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது குறித்து பேராசிரியர்களிடம் கூறினர்.உடனே பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்கு இத்தகவலை தெரிவித்தனர். ஆனால்பல்கலைக்கழக நிர்வாகம் இந்த வினாத்தாளையே கொண்டு தெரிந்த அளவுக்கு தேர்வுஎழுதுமாறு கூறியது.
மாணவர்கள் கடும் சிரமத்துடன் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்தபொருளியல் பகுப்பாய்வு தேர்விலும் இதேபோன்ற குழப்பம் ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications