For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்திலிருந்து தப்பி வந்த 7 நெல்லை பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

குஜராத் மாநிலத்தில் உள்ள மீன் பதப்படுத்தும் கம்பெனியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 85 பெண்கள் கொத்தடிமைகளாக இருந்தனர். அவர்களில் 7பேர் அங்கிருந்து தப்பித்து வந்து போலீசில் புகார் செய்தனர்.

குஜராத் மாநிலம் வீரவாள் என்ற இடத்தில் மீன்கள் பதப்படுத்தும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு வேன்களில் வரும் மீன்களை இறக்கிகூடைகளில் அள்ளி எடை போட்டு வைக்கும் பணிக்கு பெண்கள் தேவைப்பட்டனர்.

இதுபற்றி அந்த கம்பெனியில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த சூசையப்பன் என்பவர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலுள்ள தனது மாமாசுப்ரமணியனுக்குத் தெரிவித்து இருக்கிறார்.

சுப்ரமணியம் விக்ரமசிங்கபுரம், சேரன்மாதேவி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறி பல பெண்களை நெல்லையில் இருந்துகுஜராத்துக்கு ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

இங்கிருந்து குஜராத் சென்ற பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவந்தவர்களில் 7 பேர் தற்போது தப்பித்து வந்துள்ளனர்.

அவர்கள் பெயர் சீதாலட்சுமி- கூனியூர், ராதா, கனி, பாரதிமணி, சந்திரா, இவர்கள் 4 பேரும் மேல் கூனியூரைச் சேர்ந்தவர்கள். மற்ற இரு பெண்கள்காருகுறிச்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் வழக்குப் பதிவு செய்து, குஜராத்மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருக்கும் நெல்லை மாவட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X