மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலைய மின் விளக்குக் கம்பத்தில் ஏறி நின்று, தற்கொலைசெய்யப் போவதாக மிரட்டிய மத்திய ஆயுதப் படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸ்காரர்மன நலப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றுகிறார்.இவர் செவ்வாய்க்கிழமை சென்டிரல் ரயில் நிலையத்திலுள்ள மின் விளக்குக் கம்பத்தில்ஏறினார். மேலே ஏறிச் சென்று விட்ட அவர் அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலைசெய்யப் போவதாக கூறினார். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். அவரைசமாதானப்படுத்தி கீழே இறக்க முயற்சிக்கப்பட்டது. பின்னர் உதவி சப் இன்ஸ்பெக்டர்முகம்மது காசிம் முயற்சியால், ராஜா கம்பத்திலிருந்து கீழே இறங்கினார்.
மிகவும் பதற்றமான நிலையில் காணப்பட்ட அவரை விசாரித்தபோது, குடும்பப்பிரச்சினை காரணமாக தற்கொலை செய்ய முயற்சித்ததாகத் தெரிவித்தார். அவரை,மருத்துவப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்போலீஸார் சேர்த்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications