இந்தி நடிகரைப் பாதுகாக்க முன்வருகிறது மே. வங்கம்
கல்கத்தா:
இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை, வீரப்பன் கடத்திச் செல்லாத வகையில், அவருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றுமேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா புதன்கிழமை அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஊட்டியில் ஹோட்டல் நடத்தி வருவதால் ஊட்டியிலேயே தங்கியிருக்கிறார். படப்பிடிப்புநடக்கும்போது, ஊட்டியிலிருந்து டெல்லிக்கும், மும்பைக்கும் சென்று வருகிறார்.
முதுமலை மற்றும் அருகிலுள்ள பந்திப்பூர் காட்டில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதால், மிதுன் சக்ரவர்த்தியை வீரப்பன் கடத்தலாம் என்று ஒரு கருத்துநிலவுகிறது. சமீபத்தில் மிதுன் சக்ரவர்த்தியின் ஹோட்டலை சிலர் நோட்டமிட்டதாகவும் செய்திகள் வந்தன. இதனால் அச்சம் தெரிவித்து மிதுன் சக்ரவர்த்திமேற்கு வங்க முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்திற்கு பதில் எழுதியுள்ள முதல்வர் புத்ததேவ், மிதுன் சக்ரவர்த்தி தொடர்ந்து தமிழகத்தில் தங்குவதாக இருந்தால் அவருக்கு மேற்கு வங்கஅரசு சார்பில் போதிய பாதுகாப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications