For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனுக்கு வக்காலத்து வாங்குவதா? பா.ஜ.க. ஆவேசம்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்த வீரப்பனுக்கு நெடுமாறன் வக்காலத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது.தேவைப்பட்டால் வீரப்பனைப் பிடிக்க ராணுவத்தைக் கூட அனுப்பலாம் என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கிருபாநிதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சி நீலகிரியில் "தாமரை ரத யாத்திரையைத் தொடங்கியது. இந்த ரத யாத்திரைகோவை வழியாக ஈரோட்டை அடைந்துள்ளது. இந்த ரதயாத்திரையில் பங்கேற்றிருக்கும் பா.ஜ. தலைவர்கிருபாநிதி, ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பக் கூடாது என நெடுமாறன் கூறியுள்ளார். இதையாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. வீரப்பனின் ஆள் கடத்தலால் இரு மாநில அரசுகளுமே நெருக்கடியைச்சந்தித்தன. இந்த மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை கூட உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களில் வீரப்பன் ஈடுபட்டுள்ளான். தனி மனிதநலனுக்காக மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்த வீரப்பனுக்கு வக்காலத்து வாங்குவது கண்டிக்கத்தக்க செயல்.

தனி மனிதனின் நலனுக்காக ஒட்டுமொத்த சமுதாயம் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வீரப்பனைப்பிடிக்க மத்திய அரசு உதவி செய்யக் காத்திருக்கிறது. இரு மாநிலங்களும் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மத்திய அரசு அதிரடிப்படை பிரிவையோ, ராணுவத்தையோ அனுப்ப வேண்டும். மீண்டும் இது போன்ற தவறுகள்ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

கொள்கை கோட்பாடுகளைச் சொல்வது மட்டும் பாரதீய ஜனதாவின் நோக்கம் அல்ல. பொதுமக்களின்அடிப்படைப் பிரச்னைகளையும் கவனிக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இது வரை ரத யாத்திரையின்போது 150 மனுக்களைப் பெற்றுள்ளோம். இந்த மனுக்கள் மீதான நடவடிக்கைக்காகஒரு கமிட்டி அமைத்துள்ளோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டளி மக்கள் கட்சி, தி.மு.க. வை விமர்சனம் செய்வதைதவிர்த்து விட்டு, குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்து நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு உள்ள பகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிடவுள்ளோம். எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவதுஎன்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

நாட்டின் நிலனைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரச் சீரழிவைத் தவிர்க்கவும், கடனற்ற நாடு என்பதைஉருவாக்கவும் மானியங்கள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்களைப் பாதிக்கும் மண்ணெண்ணெய், காஸ் விலைகுறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களின் மத்தியில் வரவேற்பைப் பொற்றுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X