சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய புஷ் திட்டம்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாநிலத்தில் கையால் எண்ணப்பட்ட வாக்குகளையும், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று புளோரிடா சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய டெக்ஸாஸ் மாநில கவர்னரும், அதிபர் தேர்தலுக்கானகுடியரசுக் கட்சி வேட்பாளருமான ஜார்ஜ் டபிள்யூ புஷ் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய புஷ் முடிவு செய்துள்ளதாக சி.என்.என். தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தனதுவக்கீல்களுக்கும் புஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, புதன்கிழமை புளோரிடா சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், கையால் எண்ணப்பட்ட வாக்குகளை, மொத்த வாக்குகள் எண்ணிக்கையுடன் சேர்க்கஉத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. கையால் எண்ணப்பட்ட வாக்குகளை, மொத்த வாக்கு எண்ணிக்கையுடன் சேர்ககுமாறு, மாநில தேர்தல்அதிகாரி கேத்தரின் ஹாரிஸுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புளோரிடா சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் அல் கோரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தற்போது புஷ் 930 வாக்குகளே அதிகம்பெற்று முன்னணியில் உள்ளார். புளோரிடா மாநிலத்தின் மேலும் 3 கவுன்டிகளில் கையால் வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதில்அல்கோருக்கு சாதகமாக முடிவுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புளோரிடாவில் யார் வெற்றி பெறுகிறாரோ அவருக்கு 25 எலக்டோரல் வாக்குகள் கிடைக்கும். அவரே அடுத்த அமெரிக்க அதிபராகவும்தேர்வு செய்யப்படுவார்.
மியாமி டேடியில் மறு எண்ணிக்கை:
இதற்கிடையே, மியாமி டேடி கவுன்டியில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர் விரும்புவதாக அவரதுகட்சி பிரச்சார நிர்வாகி வில்லியம் டாலே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் மியாமி டேடியில் ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது எங்களுக்குமிகப்பெரிய தலைவலியாக உள்ளது.
புளோரிடா மாநில சட்டப்பட்டி, வாக்குகள் எண்ணப்பட்டதில் தவறு இருந்தால் உடனடியாக மறு எண்ணிக்கைக்கு உத்தர விட வேண்டும்.
மியாமி டேடியில் வாக்குகள் கையால் எண்ணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றார் வில்லியம் டாலே.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications