"செல்போனில் கலக்கும் வீரப்பன்
ஈரோடு:
சத்தியமங்கலம் காட்டில் பதுங்கியிருக்கும் வீரப்பனிடம் வெளிநாடு வரை பேசக் கூடிய வகையில், செல்போன் இருப்பதாக உளவுத் துறைப் போலீஸாருக்குரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
வீரப்பனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தது யார் என்பது குறித்து உளவுத் துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராஜ்குமாரைக் கடத்திச் சென்று 108 நாட்கள் சிறை வைத்திருந்து விடுவித்தார் வீரப்பன். தற்போது ஆயுத பலத்தை மட்டுமின்றி, தகவல் தொடர்புபலத்தையும் வீரப்பன் குழுவினர் பெருக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது வீரப்பனிடம், செல்போன், "சிம் கார்டு ஆகியவை இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், வெளிநாடு வரை பேச உதவும் "ரோவிங் கார்டும் வீரப்பனிடம் இருப்பதாகத் தெரிகிறது. ரோவிங் கார்டுகளின் மாதாந்திர கட்டணம் ரூ. 7000 ஆகும்.
இந்த கார்டுகளை தமிழகம் அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் மீது உளவுப் பிரிவு போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக ரகசியவிசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications