பிரான்ஸ் கண்காட்சியில் பளிச்சிடும் இந்திய பேக்கிங் தொழில் திறமை
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் பாக்கிங் தொழில் கண்காட்சியில் இந்தியநிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப திறமையை வெகுவாக எடுத்துக் காட்டியுள்ளன.
பாரீஸில் "எம்பல்லேஜ்-2000 என்ற பெயரில், 34-வது பாக்கிங் தொழில் கண்காட்சிநடந்து வருகிறது. இந்தியாவும், பிரான்ஸும் சேர்ந்து இதை நடத்துகின்றன. மொத்தம்2700 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. 1 லட்சம் பேர் வரை இந்தக்கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லிபான்டே என்ற இடத்தில் நடந்து வரும் கண்காட்சி திங்கள்கிழமை துவங்கியது. 2நாள் கருத்தரங்கமும் இந்தக் கண்காட்சியில் நடந்தது. இதில், இந்திய பாக்கிங்தொழிலுக்கு உள்ள உலகளாவிய மார்க்கெட் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்திய பேக்கிங் தொழிலுக்கு நல்ல திறமை இருப்பதால், ஐரோப்பிய, மேற்கத்தியநாடுகளின் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கலாம் என்றுகருத்தரங்கில் அழைப்பு விடப்பட்டது.
கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஒருவர் கூறுகையில், கண்காட்சியில் கலந்துகொண்டுள்ள பலர், இந்தியாவின் பேக்கிங் திறமையைப் புரிந்து கொண்டு, தங்களதுபகுதிகளிலும் இதுபோன்ற கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கைவிடுத்தனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications