ரூ. 65 லட்சத்துடன் அதிமுக பிரமுகர் தமைறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிக வட்டி தருவாக சொல்லி பொதுமக்களிடம் ரூ.65 லட்சம் வரை மோசடி செய்தஅதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை முனுசாமி தோட்டம் நான்காவது தெருவில் வசிப்பவர்நேரு. அதிமுக பிரமுகர். இவர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

இவர் இப்பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார்.ஏராளமானவர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி நிறைய பணம் வாங்கினார்.

அதன் மூலம் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டுக் கொடுக்கும்தொழிலை செய்தார். அதோடில்லாமல் பொதுமக்களின் நகைகளை அடமானம்பெற்றுக் கொண்டு பணம் கொடுத்து வந்ததார்.

இதனால் இவரை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பணத்தை கொடுத்தனர்.லட்சக்கணக்கில் பணம் சேர்ந்ததும் திடீரென்று குடும்பத்துடன் நேரு தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் எல்லா இடங்களிலும் அவரை தேடினர். ஆள்கிடைக்கவில்லை.

இதையடுத்து 100 பெண்கள் திரண்டு வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்கொடுத்தனர். எங்களது பணம் 65 லட்சம் வரை மோசடி செய்து விட்டு ருேதலைமறைவாகி விட்டார் என்று முறையிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+