தமிழக அதிரடிப்படையின் வேட்டை துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்:
ஒரு வழியாய் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கிவிட்டது தமிழக அதிரடிப்படை.
கடும் மழை, பனிமூட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் இப்போது தீவிரமடைந்துவிட்டன.
காட்டுப் பகுதியின் எல்லையில் புதிய முகாம்களையும் அதிரடிப்படையினர் அமைத்துவிட்டனர். மேலும் முகாம்களை அமைத்துவருகின்றனர்.
தமிழக காவல்துறையிடம் உள்ள நவீன ஆயுதங்கள் இந்தப் படையினருக்கு தரப்பட்டுள்ளன. காட்டுக்குச் செல்லும் சாலைகளில்தடுப்புகளும், கண்காணிப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடக அதிரடிப்படையினர் அம் மாநில எல்லையில் இருந்து காட்டு பகுதியை நெருங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications