நக்சலைட்டுகளிடமிருந்து வெடிகுண்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தர்மபுரி மாவட்டம் கரிமங்கலம் என்ற இடத்தில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த10 பைப் வெடிகுண்டுகள் மற்றும் ஏராளமான வெடி பொருட்களை போலீஸார்பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முருகன் என்ற விவசாயியின் வீட்டில் நக்சலைட்டுகள் சிலர் கூட்டம் போடவிருப்பதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டுக்குப் போலீஸார்விரைந்து சென்றனர்.
ஆனால் போலீஸார் வருவது குறித்து அறிந்து கொண்ட நக்சலைட்டுகள் அங்கிருந்துதப்பி விட்டனர். போலீஸார் முருகனைக் கைது செய்து அவரது வீட்டில் பதுக்கிவைக்கப்படிருந்த பைப் வெடிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களைப் பறிமுதல்செய்தனர்.
பைப் வெடிகுண்டுகள் எதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்துபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications