இந்திய அரசு மின் நிறுவனங்கள் தனியார்மயமாகாது
டெல்லி:
அரசு மின்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் தனியார் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மின்துறையிலும் தனியார்முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு மின் நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இத மின்நிலையங்களின் பங்குகளை அரசு தனியாருக்கு விற்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இதை அரசுமறுத்துள்ளது.
தேசிய மின் உற்பத்திக் கழகம், தேசிய நீர் மின் உற்பத்தி நிலையம், பவர் கிரிட் கார்பொரேஷன் ஆப் இந்தியாஆகிய மின்சார நிறுவனங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படாது என மத்திய அரசு இப்போதுதெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் இந்த மின் நிலையங்களை மேலும் சிறந்த முறையில் இயங்கச் செய்யும் வகையில் சிலமுக்கிய மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications