தஞ்சை கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 2 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
நசுவினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏராளமான குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
இதனால் நசுவினி ஆற்றில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. மேலும் கருங்குளம், கரிசல்காடு ஆகிய 2 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
அதிராம்பட்டினத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையையும் மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் ஓடியது.இதனால் மஞ்சவயிறு, மங்களகாடு, செங்கபருத்திக்காடு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கரிசல்காட்டில் உள்ள 50 குடிசை வீடுகளை மழை நீர் சூழ்ந்து கொண்டது. தண்ணீர் சுமார் 3 அடி உயரத்துக்கு ஓடுகிறது. கரிசல்காட்டில் மட்டும் 20 வீடுகளின்சுவர்கள் இடிந்து விழுந்து விட்டன.
அதிராம்பட்டினத்தில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications