For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் சண்டை நிறுத்தத்திற்கு சிவசேனா எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் மாதத்தின்போது, மத்திய அரசு சண்டை நிறுத்தம்அறிவித்துள்ளதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக்கட்சியான சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சி சிவசேனா. ரம்ஜான் மாதத்தின்போது காஷ்மீரில் ராணுவநடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று சமீபத்தில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.இதற்குப் பலமாதிரியான கருத்துக்கள் கூறப்பட்டன.

இந்த நிலையில் சண்டை நிறுத்த அறிவிப்பு தேவையில்லாதது என்று சிவசேனா கட்சிகருத்துத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் நிருபம் கூறுகையில்,காஷ்மீரில் ஒரு தரப்பாக ஏன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்.இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாய் விளக்கம் அளிக்க வேண்டும்.

சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான 2 நாட்கள் கூட முடியாத நிலையில், 5இந்தியர்களை காஷ்மீர் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். எனவே இதுபோன்றஅறிவிப்புகளால் என்ன பயன்?

கடந்த மார்ச் மாதம் அப்பாவி சீக்கியர்களைக் கொன்றபோது, பாகிஸ்தான்தீவிரவாதிகள் சிறிதாவது அவர்கள் குறித்து யோசித்துப் பார்த்திருப்பார்களா?

அப்பாவி மக்களை தீவிரவாதிகள் கொல்லும்போது ராணுவ அதிகாரிகளும்,வீரர்களும் என்ன செய்வார்கள் என்பதை அரசு விளக்குமா என்றார் நிருபம்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X