உணவு கேட்டு ஒரு உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை சிறையில் குண்டு வெடிப்பு சம்பவ வழக்கில் கைதான இருவர் தங்களுக்குப் போதிய உணவு வழங்க வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கோவை மத்திய சிறையில் அல் உம்மா இயக்கத்தினர் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் கேரளாவைச் சேர்ந்த சதீஷ் (41), ஆர்மிராஜ் (40), ஆகியோரும் அடங்குவர்.
இந்த இருவரும் தங்களுக்கு மட்டும் அளவு சாப்பாடு வழங்குவது சரியல்ல, மற்ற குண்டு வெடிப்பு கைதிகளுக்கு வழங்கப்படும்உணவு போல வழங்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதையடுத்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் சிறைக் கைதிகள் தொடர்ந்துதங்களது உண்ணாவிரத்தை மேற்காெெண்டனர். மாலையில் இந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications