பனிமூட்டம்: அதிரடிப்படை பணிகளில் தேக்கம்
ஈரோடு:
நீலகிரி மலைப் பகுதியில் தொடர் மழை மற்றும் பனிமூட்டம்காரணமாக அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையில்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வீரப்பன் அடிக்கடி வந்து போகும் பகுதியாக கருதப்படும்பந்திப்பூர், கொடநாடு உட்பட நீலகிரி மலைப் பகுதிகளில்அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தேடுதல்வேட்டை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இதனால், பனிமூட்டம் உருவாகி, 5 அடிதூரத்திற்கு மேல் வெளிச்சம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
அடர்ந்த காட்டிற்குள் பனி நிலவுவதால், நீலகிரியில் உள்ளஅதிரடிப்படையினர் ஆங்காங்கே உள்ள முகாம்களில்தங்கியுள்ளனர்.
பனிமூட்டத்துடன், குளிரும் நிலவுகிறது. இது வீரப்பன்குழுவினருக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் வீரப்பன்குன்றுமலை என்ற பகுதியில் தங்கியிருக்கலாம் என்ற யூகம்எழுந்துள்ளது.
குன்றுமலைப் பகுதி செங்குத்தான மலைப் பகுதியாகும். அடர்ந்தகாடுகள் நிறைந்துள்ள இப்பகுதியில் பதுங்கு குழிகள் ஏரளமாகஉள்ளன. இவை வீரப்பனுக்கும் அவனது கூட்டாளிக்கும்புகலிடமாக விளங்கும்.
இப்பகுதியை நன்கு அறியாதவர்கள் யாரும் உள்ளே சென்றுதிரும்புவது இயலாத காரியமாகும். மேலும், விடுதலைப் புலிகள்பயிற்சி பெற்ற பகுதியாக இந்தப் பகுதி கருதப்படுகிறது.
எனவே, இப்பகுதியை சுற்றி வளைக்க அதிரடிப்படையினர்தயாராகி வருகின்றனர். இப்பணியை அதிரடிப்படைஆபரேஷனின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டி.ஐ.ஜி.தமிழ்ச் செல்வன், எஸ்.பி.க்கள் சைலேந்திரபாபு, அசோக்குமார்தாஸ், பெரியய்யா ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
வீரப்பனின் தேடுதல் வேட்டையில் இதுவரை 16 பிரிவாகஅதிரடிப்படைகள் செயல்படத் தாடங்கியுள்ளன. அடர்ந்தகாடுகளில் நவீன ஆயுதங்களுடன் முழு மூச்சுடன் களம்இறங்கியுள்ளனர் அதிரடிப்படை வீரர்கள்.