பாகிஸ்தான் ஆட்சியாளருடன் சுவாமி சந்திப்பு
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்வியாழக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதாக் கட்சித் தலைவருமான சுப்ரமணிய சுவாமியிடம், பெர்வீஸ் முஷாரப் இவ்வாறுதெரிவித்தார்.
முன்னதாக, காஷ்மீர் பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பது குறித்து இருவரும் விவாதித்தார்கள். இருப்பினும் மத்திய அரசின் தூதராக சாமிபாகிஸ்தான் சென்று முஷாரபுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் போர் நிறுத்தம் செய்யப்படும். ராணுவ வீரர்கள் அங்கு போரில் ஈடுபட மாட்டார்கள் என்று பிரதமர்வாஜ்பாய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் நிராகரித்து விட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.