தமிழக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ரோட்டரி விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரோட்டரி இந்தியா விருது பெற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகாந்தா கரியாலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதுசென்னை சயின்ஸ் சிட்டியின் துணைத் தலைவராக இருக்கிறார்.
மனித சமூகத்திற்கு சிறப்பான சேவை புரிந்தவர்களைப் பாராட்டி ரோட்டரி இந்தியா என்ற விருது வழங்கப்படுகிறது. ரோட்டரிபன்னாட்டு சங்கத்தின் மூலம் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்திலும், ஆந்திராவிலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு சந்திரகாந்தா கரியாலி ஆற்றியதன்னலமற்ற சேவையை பாராட்டி இந்த ஆண்டிற்கான விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
2 லட்ச ரூபாய் பணம், பாராட்டுப் பத்திரம் அடங்கியது இந்த விருது.












Click it and Unblock the Notifications