சென்னையில் ரூ. 103 கோடியில் பிரமாண்ட பஸ் ஸ்டாண்ட்
சென்னை:
சென்னை கோயம்பேடில் ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான பஸ் நிலையம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என்றுஅமைச்சர் பொன்முடி கூறினார்.
கோயம்பேட்டில் பஸ் நிலையம் கட்டப்பட்டு வரும் பணிகளை அவர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டன. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பஸ் நிலையம் திறக்கப்படும். இங்கு ஒரேநேரத்தில் 270 பஸ்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
ஒரு நாளில் 2500 பஸ்கள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் சுற்றுப்புற சாலைகள் அனைத்தையும் கான்கிரீட் சாலையாக மாற்ற ரூ.6 கோடியில் திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் காய்கறி கழிவுகளில் இருந்து ஈ-கம்போஸ்ட் உரம் தயாரிக்க உள்ளோம் என்றார் பொன்டி.












Click it and Unblock the Notifications