காஷ்மீர் போர் நிறுத்தத்துக்கு தேசிய லீக் வரவேற்பு
சென்னை:
ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளதற்காக இந்திய தேசியலீக் தலைவர் அப்துல் லத்தீப் பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து லத்தீப் அளித்த பேட்டி:
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அன்றைய தினம் பாபர் மசூதியை உத்தர பிரதேச வக்ப் வாரியத்திடம்ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்முரளிமனோகர் ஜோஷி, விளையாட்டுத் துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் தங்கள் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் இவர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். மூன்று அமைச்சர்களும் ராஜினாமா செய்தால் பிரதமர்வாஜ்பாயக்கு சர்வதேச அளவில் மரியாதை கூடும். ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் ஒரு மாதம் ஆயுதங்கள் எடுக்கக் கூடாதுஎன்றும், போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வாஜ்பாய் அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது.
காஷ்மீர் முதல்வரும் இதை வரவேற்றுள்ளார். காஷ்மீரில் உள்ள சில அமைப்புகள் இதை ஏற்றுள்ளன. ஒரு சில அமைப்புகள்எதிர்த்துள்ளன. போர் நிறுத்தத்தை எதிர்க்கும் அமைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார் லத்தீப்.












Click it and Unblock the Notifications