மூடப்பட்டது மேட்டூர் அணை
மேட்டூர்:
சேலத்தில் பாசனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை மூடப்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மேட்டூர் அணை எனப்படும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் தமிழகத்தின் மிக முக்கிய அணைக்கட்டு ஆகும்.
திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்கள் இந்த அணையால் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதியைப் பெறுகிறது. கடந்த மாதம் 8 ம்தேதி மேட்டூர் அணை உச்சநீர்மட்டமான 120 அடியை அடைந்து நிரம்பியது.
அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்தார்கள்.
கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையின் பாசனப் பகுதிகளான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது.
இதையடுத்து மேட்டூர் அணை மூடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 951 கன அடி தண்ணீர் வருகிறது. ஆயிரத்து 600 கன அடி தண்ணீர்வெளியேறுகிறது.












Click it and Unblock the Notifications